search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்"

    நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. #NagalandAFSPA #AFSPA
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.

    போடோலாந்து, நக்சலைட், மாவோயிஸ்ட், நாகா விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவோரை உடனடியாக கைது செய்யவும், தேவை ஏற்படும்போது தற்காப்புக்காக சுட்டுக் கொல்லவும், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் முன் அனுமதியின்றி சோதனை நடத்தவும் துணை ராணுவம், போலீசாருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது

    மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்த ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் கடந்த 31-3-2018 முதல் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது.



    இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதையும் இடையூறு மிக்க பகுதியாக அறிவித்து அங்கு பல ஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு  நீட்டித்துள்ளது.

    சமீபகாலமாக இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் ஆகிய குற்றச்செயல்களை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு துணை புரிவதற்காக வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாகலாந்து மாநிலத்தில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #NagalandAFSPA #AFSPA
    ×